வெள்ளி, 23 ஏப்ரல், 2010

யாப்பிலக்கணம்-தொடை

தொடை
தொடை என்பது தொடுக்கப்படுவது எனப் பொருள்படும்.மலர்களைத் தொடுப்பது போலவே சீர்களிலும்,அடிகளிலும் மோனை முதலியன அமையத் தொடுப்பது தொடையாகும். பாவின் ஓசையின்பத்திற்கும் சிறப்பிற்கும் இத்தொடை உறுப்பு வேண்டுவதாகும்.தொடையற்ற மொழி நடையற்றுப் போகும்என்பது பழமொழியாகும்.
தொடை ஐந்து வகைப்படும்.அவை மோனைத் தொடை,எதுகைத் தொடை,முரண் தொடை
,
இயைபுத் தொடை,அளபெடுத்தொடை என்பனவாம்.
1.மோனைத்தொடை
செய்யுளில் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.
அடிமோனை
ன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
ன்நெஞ்சே தன்னைச் சுடும்
இவ்வாறு அடிகளில் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனையாகும்.
சீர் மோனை
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பாற்கு
இவ்வாறு சீர்கள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனையாகும். இதனை வழிமோனை எனவும் வழங்குவர்.
இனமோனை
மோனைக்கு முதலெழுத்தேயன்று அதற்குரிய இனவெழுத்துக்கும் ஒன்றிவருவது இனமோனை எனப்படும்.இதனை கிளை மோனை எனவும் வழங்குவர்.
இனமோனையாக வரும் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள்
அ,ஆ,ஐ,ஔ    -ஓரினம்
இ,ஈ,எ,ஏ        -ஓரினம்
உ.ஊ,ஒ,ஓ      -ஓரினம்
உயிர்மெய்யெழுத்து
ஞ,ந            -ஓரினம்
ம,வ            -ஓரினம்
த,ச             -ஓரினம்
உதாரணங்கள்
  • னத்தொடு வாய்மை மொழியின்
  • சாதனத்தோடு ச்சர்
  • மாநிதி ருந்தித்தேடி
  • ந்தவித்தான் ற்றல் கல்விசும்பு
மோனைத்தொடை அடிமோனை, இணைமோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை,கூழை மோனை,மேற்கதுவாய் மோனை,கீழ்க்கதுவாய் மோனை,முற்று மோனை என எட்டு வகைப்படும்.இதில் அடிமோனை தவிரவுள்ள ஏழும் சீர்மோனை வகைகளாகும்.
1.அடிமோனை
அடிதோறும் வரும் முதற்சீரின் முத்லெழுத்து ஒன்றி வருவது அடிமோனையாகும்.
ள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
ள்ளத்துள் எல்லாம் உளன்
2.இணைமோனை
ஓரடியில் முதலிரு சீர்களிலும் வருவது இணைமோனையாகும்.
டிந்த டிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
3.பொழிப்பு மோனை
ஓரடியில் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை வருவது பொழிப்பு மோனையாகும்.
புனையா ஓவியம் போல் நிற்றலும்
4.ஒரூஉ மோனை
ஓரடியில் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை வருவது ஒரூஉ மோனையாகும்.
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.
5.கூழை மோனை
ஓரடியில் முதல் மூன்று சீர்களிளும் மோனை வருவது கூழை மோனையாகும்.
தானம் வமிரண்டும் ங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
6.மேற்கதுவாய் மோனை
ஓரடியில் முதல்,மூன்றாம்,நான்காம் சீர்களில் வரும் மோனை மேற்கதுவாய் மோனையாகும்.
வானின்று உலகம் ழங்கி ருதலால்
தானமிழ்தம் என்றுணர் பாரற்று
7.கீழ்க்கதுவாய் மோனை
ஓரடியில் முதல்,இரண்டாம்,நான்காம் சீர்களில் மோனை வருவது கீழ்க்கதுவாய் மோனையாகும்.
ருள்சேர் ருவினையும் சேரா றைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
8.முற்று மோனை
ஓரடியில் நான்கு சீர்களிலும் வரும் மோனை முற்று மோனையாகும்.
பெற்றோர்பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேனிர் வாழும் உலகு
2.எதுகைத்தொடை
தாம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வாம் வழங்கா தெனின்
இக்குறட்பாவின் இரண்டடிகளிலும் முதற்சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருகிறது.முதலெழுத்து அளவாதிருக்க,இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடையாகும்.இவ்வறு அடிதோறும் எதுகை அமைந்து வருவது அடியெதுகையாகும்.
சீர் தோறும் எதுகை அமைந்து வருவது சீர் எதுகையாகும். உதாரணம்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
எதுகைத் தொடையும் அடியெதுகை,இணையெதுகை,பொழிப்பெதுகை,ஒரூஉ எதுகை,கூழை எதுகை,மேற்கதுவாய் எதுகை,கீழ்க்கதுவாய் எதுகை,முற்றெதுகை என எட்டு வகைப்படும்.
1.அடி எதுகை
டிந்த கடிந்தொரார் செய்தாற்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
இவ்வாறு அடிகள் தோறும் உள்ள முதற்சீரில் உள்ள முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒற்றி வருவது அடி எதுகையாகும்.


2.இணை எதுகை
ஓரடியில் முத்லிரு சீர்களிலும் வரும் எதுகை இணை எதுகையாகும்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
3.பொழிப்பெதுகை
ஓரடியில் முதலாவது மற்றும் மூன்றாவது சீர்களில் வரும் எதுகை பொழிப்பெதுகையாகும்.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
4.ஒரூஉ எதுகை
ஓரடியில் முதற்சீர் மற்றும் நான்காம் சீர்களில் வரும் எதுகை ஒரூஉ எதுகையாகும்.
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய தெல்லாம் தரும்.
5.கூழையெதுகை
ஓரடியில் முதற்சீர்,இரண்டாம் சீர் மற்றும் மூன்றாம் சீர்களில் வரும் எதுகை கூழை எதுகையாகும்.
ற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்றி விடற்கு.
6.மேற்கதுவாய் எதுகை
ஓரடியில் முதற்சீர் ,மூன்றாம் சீர்,நான்காம் சீர்களில் வரும் எதுகை மேற்கதுவாய் எதுகையாகும்.
க்கொண்ட எல்லாம் அப்போம் இப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
7.கீழ்க்கதுவாய் எதுகை
ஓரடியில் முதற்சீர்,இரண்டாம் சீர்,நான்காம் சீர்களில் வரும் எதுகை கீழ்க்கதுவாய் எதுகையாகும்.
ழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்ப்ப் படும்.
8.முற்றெதுகை
ஓரடியிலுள்ள நான்கு சீர்களிலும் வரும் எதுகை முற்றெதுகையாகும்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
3.முரண் தொடை
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
இத்தொடரில் முன்,பின் என சொற்கள் முரண்பட்டு அமைந்துள்ளன.இவ்வாறு அடிகளிலோ,சீர்களிலோ சொல்லோ பொருளோ முரண்பட்டு அமைவது முரண் தொடையாகும்.
     முரண் தொடை அடி முரண்,இணை முரண்,பொழிப்பு முரண்,ஒரூஉ முரண்,கூழை முரண்,மேற்கதுவாய் முரண்,கீழ்க்கதுவாய் முரண்,முற்று முரண் என எட்டு வகைப்படும்.
1.அடி முரண்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
அடிதோறும் முதற்சொல் முரண்பட்த் தொடுப்பது அடித்தொடையாகும்
2.இணை முரண்
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.
இவ்வாறு ஓரடியில் முதல் இரு சீர்களயும் முரண்படத் தொகுப்பது இணை முரணாகும்.
3.பொழிப்பு முரண்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவற்கு
ஓரடியில் முதல் மற்றும் மூன்றாவது சீர்களில் முரண் அமைவது.
4.ஒரூஉ முரண்
புறந்த்தூய்மை நீரன் அமையும் அகந்த்தூய்மை
வாய்மையாற் காணப் படும்
ஓரடியில் முதல் மற்றும் நான்காவது சீர்களில் அமையும் முரண்.
5.கூழை முரண்
கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்றன்
இவ்வாறு ஓரடியில் முதற்சீர்,இரண்டாம் சீர்,மூன்றாம் சீர்களில் அமையும் முரண்.
6.மேற்கதுவாய் முரண்
வெண்வளைத் தோளும் சேயரிக் கருங்கண்ணும்
இவ்வாறு ஓரடியில் முதற்சீர்,மூன்றாம் சீர் மற்றும் நான்காம் சீர்களில் முரண் அமைவது மேற்கதுவாய் முரணாகும்.
7.கீழ்க்கதுவாய் முரண்
இருக்கையும் நிலையும் ஏந்தழில் இயக்கமும்
இவ்வாறு ஓரடியில் முதல்,இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் அமையும் முரண் கீழ்க்கதுவாய் முரணாகும்.
8.முற்றும் முரண்
துவர்வாய்த் தீஞ்சொல்லும் உவந்தெனன் முனியாது
இவ்வாறு ஓரடியில் உள்ள அனைத்து சீர்களையும் முரண்பட்த் தொகுப்பது முற்று முரணாகும்.
4.இயைபுத் தொடை
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டத் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம்விளை யாடும்
மேற்கண்ட பாடலடிகளின் இறுதியில் ஒரே ஒலி தரும் கூடும்,மூடும்,நாடும்,ஆடும் எனும் சொற்கள் அமைந்துள்ளன.இவ்வாறு அமைவது இயைபுத் தொடையாகும்.
செய்யுளின் அடிகளிலோ சீர்களிலோ இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருவது இயைபுத் தொடை எனப்படும்.
 5.அளபெடைத் தொடை
செய்யுளில் சீர்கள் அளபெடுத்து வருவது அளபெடைத் தொடையாகும்.

2 கருத்துக்கள்:

பெயரில்லா சொன்னது…

ஐயா அற்புதமான திருப்பணி செய்தீர். விளக்கங்கள் எல்லாம் அருமை. நன்றிகள் கோடி...

Unknown சொன்னது…

தமிழில் உள்ள பழைய வார்த்தைகளுக்கு விளக்கம் வேண்டும்.எடுத்துக்காட்டாக:ஏகாந்தம்,பரிபாசம் இது போன்ற எண்ணற்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் வேண்டும்.

கருத்துரையிடுக