சனி, 17 ஏப்ரல், 2010

சொல்-அறிமுகம்,வகைகள்

சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம்,மொழி என்றும் கூறுவது உண்டு.

சொற்கள் அடிப்படையில் பெயர்ச்சொல்,வினைச்சொல் என்று இரண்டே வகை என்றும் பிற சொல் வகைகள் (உரிச்சொல்,இடைச்சொல் முதலியன) இவை இரண்டிலிருந்து மருவி வருவனவே என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. காட்டாக கை, தை, மை, வா, போ. இவ்வகைச்சொற்களுக்கு ஓரெழுத்து ஒருமொழி என்று பெயர்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்
சொலெனப் படுப பெயரே வினை என்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே
இடைச்சொற் கிளவியும் உரிச்சொற்கிளவியும்
அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப -தொல்காப்பியம்





0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக