7.ஐகாரக் குறுக்கம்
ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு
மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும்
ஒலிப்பது.
ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
எ.கா:
ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும்.
மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில்
ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து
ஒலிக்கும். இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்
8.ஔகாரக் குறுக்கம்
ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.
9.மகரக் குறுக்கம்
"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.
மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்

10.ஆய்தக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.
எ.கா.: முள் + தீது = முஃடீது
மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு
மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும்
ஒலிப்பது.
ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
எ.கா:
ஐந்து | - ஐகாரம் மொழிக்கு முதலில் | - 1 1/2 மாத்திரை |
வளையல் | - ஐகாரம் மொழிக்கு இடையில் | - 1 மாத்திரை |
மலை | - ஐகாரம் மொழிக்கு கடையில் | - 1 மாத்திரை |
ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும்.
மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில்
ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து
ஒலிக்கும். இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்
8.ஔகாரக் குறுக்கம்
ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.
தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்எ.கா:
-
- ஔவை
9.மகரக் குறுக்கம்
"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.
மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்
செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்<br />னகார மகாரம் ஈர் ஒற்றாகும்-தொல்காப்பியம்செய்யுளில் ’போலும்,மருளும்’ என்னும் சொற்களில் உள்ள ஈற்றயல் எழுத்துக்களில் உள்ள உகரம் கெட்டு போல்ம்.மருள்ம் என்றாகி போன்ம்,மருண்ம் எனத் திரியும்.அவ்வாறு திரிந்த ‘ன’கர, ‘ண’கரங்களுக்கு முன் உள்ள ‘ம’கரம் தனக்குரிய அளவினின்று அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்.
-
- வரும் வண்டி
- தரும் வளவன்
ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்-நன்னூல்


ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.
எ.கா.: முள் + தீது = முஃடீது
மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்
ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்-நன்னூல்

0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக