புதன், 14 ஏப்ரல், 2010

எழுத்து-சார்பெழுத்துக்கள் பகுதி 3

4.குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.

குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
(குறுகிய ஓசையுடைய இகரம்)
எ.கா:
நாடு + யாது -> நாடியாது
கொக்கு + யாது -> கொக்கியாது

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

நன்னூலிலிருந்து

யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய
 
கேண்மியா,சென்மியா
 
மேலே உள்ள சொற்களில் மியா என்பது அசைச்சொல்.இதில் மி என்னும் எழுத்து 
தனக்குரிய மாத்திரை அளவிலேயே ஒலிக்கும்.
(கேண்மியா=கேள்+மியா=நீ கேள்,சென்மியா=செல்+மியா=நீ செல்)இங்கு மியா 
என்னும் சொல் செய்யுளில் பொருளின்றி அசைச்சொல்லாக,முன்னிலை இடத்தில் 
வந்துள்ளது.இங்கு மியாவில் உள்ள இகரம் குறைந்து குற்றியலிகரமாயிற்று. 



0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக