4.குற்றியலிகரம்
நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
(குறுகிய ஓசையுடைய இகரம்)
எ.கா:
-
- நாடு + யாது -> நாடியாது
- கொக்கு + யாது -> கொக்கியாது
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்
நன்னூலிலிருந்து
யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய
கேண்மியா,சென்மியா
மேலே உள்ள சொற்களில் மியா என்பது அசைச்சொல்.இதில் மி என்னும் எழுத்து
தனக்குரிய மாத்திரை அளவிலேயே ஒலிக்கும்.
(கேண்மியா=கேள்+மியா=நீ கேள்,சென்மியா=செல்+மியா=நீ செல்)இங்கு மியா
என்னும் சொல் செய்யுளில் பொருளின்றி அசைச்சொல்லாக,முன்னிலை இடத்தில்
வந்துள்ளது.இங்கு மியாவில் உள்ள இகரம் குறைந்து குற்றியலிகரமாயிற்று.
0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக